குறள்: 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.

These two: the code renowned and spies,In these let king confide as eyes

மு.வரதராசன் உரை

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

கலைஞர் உரை

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்

Explanation

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed

Kural Info

குறள் எண்:581
Category:பொருட்பால்
அதிகாரம்:ஒற்றாடல்
இயல்:அரசியல்