மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.
குறள்: 582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.
குறள்: 583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல்.
குறள்: 584வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று.
குறள்: 585கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.
குறள்: 586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று.
குறள்: 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று.
குறள்: 588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
குறள்: 589ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.
குறள்: 590சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.