குறள்: 589ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.

One spy must not another see: contrive it so;And things by three confirmed as truth you know

மு.வரதராசன் உரை

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

சாலமன் பாப்பையா உரை

ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

கலைஞர் உரை

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்

Explanation

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it

Kural Info

குறள் எண்:589
Category:பொருட்பால்
அதிகாரம்:ஒற்றாடல்
இயல்:அரசியல்