குறள்: 590சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.

Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light

மு.வரதராசன் உரை

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

கலைஞர் உரை

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்

Explanation

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret

Kural Info

குறள் எண்:590
Category:பொருட்பால்
அதிகாரம்:ஒற்றாடல்
இயல்:அரசியல்