குறள்: 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.

Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn

மு.வரதராசன் உரை

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

கலைஞர் உரை

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்

Explanation

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men

Kural Info

குறள் எண்:873
Category:பொருட்பால்
அதிகாரம்:பகைத்திறம் தெரிதல்
இயல்:நட்பியல்