மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 871பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
குறள்: 872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.
குறள்: 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.
குறள்: 874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.
குறள்: 875தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
குறள்: 876தேறனும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.
குறள்: 877நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.
குறள்: 878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.
குறள்: 879இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
குறள்: 880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.