குறள்: 876தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.

Whether you trust or not, in time of sore distress,Questions of diff'rence or agreement cease to press

மு.வரதராசன் உரை

இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

கலைஞர் உரை

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

Explanation

Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)

Kural Info

குறள் எண்:876
Category:பொருட்பால்
அதிகாரம்:பகைத்திறம் தெரிதல்
இயல்:நட்பியல்