குறள்: 877நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.

To those who know them not, complain not of your woes;Nor to your foeman's eyes infirmities disclose

மு.வரதராசன் உரை

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

கலைஞர் உரை

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது

Explanation

Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes

Kural Info

குறள் எண்:877
Category:பொருட்பால்
அதிகாரம்:பகைத்திறம் தெரிதல்
இயல்:நட்பியல்