குறள்: 775விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear

மு.வரதராசன் உரை

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை

பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

கலைஞர் உரை

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்

Explanation

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

Kural Info

குறள் எண்:775
Category:பொருட்பால்
அதிகாரம்:படைச் செருக்கு
இயல்:படையில்