மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர்.
குறள்: 772கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.
குறள்: 773பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
குறள்: 774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.
குறள்: 775விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
குறள்: 776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.
குறள்: 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
குறள்: 778உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்.
குறள்: 779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.
குறள்: 780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.