குறள்: 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Who seek for world-wide fame, regardless of their life,The glorious clasp adorns, sign of heroic strife

மு.வரதராசன் உரை

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

கலைஞர் உரை

சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்

Explanation

The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)

Kural Info

குறள் எண்:777
Category:பொருட்பால்
அதிகாரம்:படைச் செருக்கு
இயல்:படையில்