குறள்: 779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn

மு.வரதராசன் உரை

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

கலைஞர் உரை

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது

Explanation

Who would reproach with failure those who seal their oath with their death ?

Kural Info

குறள் எண்:779
Category:பொருட்பால்
அதிகாரம்:படைச் செருக்கு
இயல்:படையில்