குறள்: 764அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.

That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed

மு.வரதராசன் உரை

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

கலைஞர் உரை

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

Explanation

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)

Kural Info

குறள் எண்:764
Category:பொருட்பால்
அதிகாரம்:படை மாட்சி
இயல்:படையில்