மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 761உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.
குறள்: 762உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.
குறள்: 763ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.
குறள்: 764அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.
குறள்: 765கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.
குறள்: 766மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
குறள்: 767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.
குறள்: 768அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.
குறள்: 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
குறள்: 770நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.