குறள்: 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு.

Friendship of old and faithful friends,Who ne'er forsake, the world commends

மு.வரதராசன் உரை

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

கலைஞர் உரை

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்

Explanation

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy

Kural Info

குறள் எண்:809
Category:பொருட்பால்
அதிகாரம்:பழைமை
இயல்:நட்பியல்