பழைமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 801பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

குறள்: 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குஉப்பாதல் சான்றோர் கடன்.

குறள்: 803பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை.

குறள்: 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்.

குறள்: 805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்.

குறள்: 806எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

குறள்: 807அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.

குறள்: 808கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்.

குறள்: 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு.

குறள்: 810விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்.