குறள்: 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

The fool will merit hell in one brief life on earth,In which he entering sinks through sevenfold round of birth

மு.வரதராசன் உரை

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

கலைஞர் உரை

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்

Explanation

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births

Kural Info

குறள் எண்:835
Category:பொருட்பால்
அதிகாரம்:பேதைமை
இயல்:நட்பியல்