பேதைமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 831பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

குறள்: 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

குறள்: 833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்

குறள்: 834ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல்.

குறள்: 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

குறள்: 836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.

குறள்: 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.

குறள்: 838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின்.

குறள்: 839பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.

குறள்: 840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.