குறள்: 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.

When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore

மு.வரதராசன் உரை

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

கலைஞர் உரை

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது

Explanation

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve

Kural Info

குறள் எண்:837
Category:பொருட்பால்
அதிகாரம்:பேதைமை
இயல்:நட்பியல்