குறள்: 905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

Who quakes before his wife will ever tremble too,Good deeds to men of good deserts to do

மு.வரதராசன் உரை

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

கலைஞர் உரை

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்

Explanation

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good

Kural Info

குறள் எண்:905
Category:பொருட்பால்
அதிகாரம்:பெண்வழிச் சேறல்
இயல்:நட்பியல்