பெண்வழிச் சேறல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது.

குறள்: 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.

குறள்: 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.

குறள்: 904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.

குறள்: 905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

குறள்: 906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர்.

குறள்: 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

குறள்: 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட் டாங்கு ஒழுகு பவர்.

குறள்: 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல்.

குறள்: 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.