குறள்: 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட் டாங்கு ஒழுகு பவர்.

Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform

மு.வரதராசன் உரை

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

கலைஞர் உரை

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்

Explanation

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds

Kural Info

குறள் எண்:908
Category:பொருட்பால்
அதிகாரம்:பெண்வழிச் சேறல்
இயல்:நட்பியல்