குறள்: 841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.

Want of knowledge, 'mid all wants the sorest want we deem;Want of other things the world will not as want esteem

மு.வரதராசன் உரை

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

சாலமன் பாப்பையா உரை

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

கலைஞர் உரை

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

Explanation

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such

Kural Info

குறள் எண்:841
Category:பொருட்பால்
அதிகாரம்:புல்லறிவாண்மை
இயல்:நட்பியல்