புல்லறிவாண்மை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.

குறள்: 842அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.

குறள்: 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.

குறள்: 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.

குறள்: 845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.

குறள்: 846அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.

குறள்: 847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.

குறள்: 848ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.

குறள்: 849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.

குறள்: 850உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும்.