குறள்: 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.

With keener anguish foolish men their own hearts wring,Than aught that even malice of their foes can bring

மு.வரதராசன் உரை

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

கலைஞர் உரை

எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்

Explanation

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes

Kural Info

குறள் எண்:843
Category:பொருட்பால்
அதிகாரம்:புல்லறிவாண்மை
இயல்:நட்பியல்