குறள்: 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல் நோக்கி வாழுங் குடி.

All earth looks up to heav'n whence raindrops fall;All subjects look to king that ruleth all

மு.வரதராசன் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

கலைஞர் உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது

Explanation

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive

Kural Info

குறள் எண்:542
Category:பொருட்பால்
அதிகாரம்:செங்கோன்மை
இயல்:அரசியல்