மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 541ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
குறள்: 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல் நோக்கி வாழுங் குடி.
குறள்: 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.
குறள்: 544குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.
குறள்: 545இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.
குறள்: 546வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
குறள்: 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.
குறள்: 548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.
குறள்: 549குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.
குறள்: 550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.