குறள்: 544குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.

Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands

மு.வரதராசன் உரை

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

சாலமன் பாப்பையா உரை

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

கலைஞர் உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

Explanation

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

Kural Info

குறள் எண்:544
Category:பொருட்பால்
அதிகாரம்:செங்கோன்மை
இயல்:அரசியல்