குறள்: 545இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.

Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields

மு.வரதராசன் உரை

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்

Explanation

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

Kural Info

குறள் எண்:545
Category:பொருட்பால்
அதிகாரம்:செங்கோன்மை
இயல்:அரசியல்