குறள்: 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு.
Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions
| குறள் எண்: | 454 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சிற்றினம் சேராமை |
| இயல்: | அரசியல் |