சிற்றினம் சேராமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.

குறள்: 452நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.

குறள்: 453மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல்.

குறள்: 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு.

குறள்: 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.

குறள்: 456மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை.

குறள்: 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும்.

குறள்: 458மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து.

குறள்: 459மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து.

குறள்: 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.