குறள்: 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.

Both purity of mind, and purity of action clear,Leaning no staff of pure companionship, to man draw near

மு.வரதராசன் உரை

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை

மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

கலைஞர் உரை

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்

Explanation

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct

Kural Info

குறள் எண்:455
Category:பொருட்பால்
அதிகாரம்:சிற்றினம் சேராமை
இயல்:அரசியல்