குறள்: 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும்.

Goodness of mind to lives of men increaseth gain;And good companionship doth all of praise obtain

மு.வரதராசன் உரை

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

கலைஞர் உரை

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்

Explanation

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men

Kural Info

குறள் எண்:457
Category:பொருட்பால்
அதிகாரம்:சிற்றினம் சேராமை
இயல்:அரசியல்