குறள்: 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.
Than good companionship no surer help we know;Than bad companionship nought causes direr woe
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked
| குறள் எண்: | 460 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சிற்றினம் சேராமை |
| இயல்: | அரசியல் |