குறள்: 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.

Than good companionship no surer help we know;Than bad companionship nought causes direr woe

மு.வரதராசன் உரை

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

கலைஞர் உரை

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை

Explanation

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked

Kural Info

குறள் எண்:460
Category:பொருட்பால்
அதிகாரம்:சிற்றினம் சேராமை
இயல்:அரசியல்