குறள்: 641நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று.

A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain

மு.வரதராசன் உரை

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

சாலமன் பாப்பையா உரை

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

கலைஞர் உரை

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்

Explanation

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness

Kural Info

குறள் எண்:641
Category:பொருட்பால்
அதிகாரம்:சொல்வன்மை
இயல்:அமைச்சியல்