மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 641நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று.
குறள்: 642ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
குறள்: 643கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.
குறள்: 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல்.
குறள்: 645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
குறள்: 646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்.
குறள்: 647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
குறள்: 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.
குறள்: 649பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.
குறள்: 650இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார்.