குறள்: 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.

Swiftly the listening world will gather round,When men of mighty speech the weighty theme propound

மு.வரதராசன் உரை

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

சாலமன் பாப்பையா உரை

சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

கலைஞர் உரை

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்

Explanation

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them

Kural Info

குறள் எண்:648
Category:பொருட்பால்
அதிகாரம்:சொல்வன்மை
இயல்:அமைச்சியல்