குறள்: 935கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.
The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,Thirsting for gain- the men in other days who came to nought
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)
| குறள் எண்: | 935 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சூது |
| இயல்: | நட்பியல் |