மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
குறள்: 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
குறள்: 933உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
குறள்: 934சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.
குறள்: 935கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.
குறள்: 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.
குறள்: 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.
குறள்: 938பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.
குறள்: 939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
குறள்: 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.