குறள்: 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.

Ancestral wealth and noble fame to ruin haste,If men in gambler's halls their precious moments waste

மு.வரதராசன் உரை

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

கலைஞர் உரை

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்

Explanation

To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character

Kural Info

குறள் எண்:937
Category:பொருட்பால்
அதிகாரம்:சூது
இயல்:நட்பியல்