குறள்: 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.

When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know

மு.வரதராசன் உரை

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

கலைஞர் உரை

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்

Explanation

Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)

Kural Info

குறள் எண்:521
Category:பொருட்பால்
அதிகாரம்:சுற்றந் தழால்
இயல்:அரசியல்