மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.
குறள்: 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும்.
குறள்: 523அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.
குறள்: 524சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன்.
குறள்: 525கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும்.
குறள்: 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.
குறள்: 527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.
குறள்: 528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்.
குறள்: 529தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும்.
குறள்: 530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத் திருந்து எண்ணிக் கொளல்.