குறள்: 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும்.

The gift of kin's unfailing love bestowsMuch gain of good, like flower that fadeless blows

மு.வரதராசன் உரை

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

கலைஞர் உரை

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்

Explanation

If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth

Kural Info

குறள் எண்:522
Category:பொருட்பால்
அதிகாரம்:சுற்றந் தழால்
இயல்:அரசியல்