குறள்: 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.

Than one who gifts bestows and wrath restrains,Through the wide world none larger following gains

மு.வரதராசன் உரை

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

கலைஞர் உரை

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்

Explanation

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger

Kural Info

குறள் எண்:526
Category:பொருட்பால்
அதிகாரம்:சுற்றந் தழால்
இயல்:அரசியல்