குறள்: 509தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.

Trust no man whom you have not fully tried,When tested, in his prudence proved confide

மு.வரதராசன் உரை

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

கலைஞர் உரை

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது

Explanation

Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate

Kural Info

குறள் எண்:509
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து தெளிதல்
இயல்:அரசியல்