மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 501அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்.
குறள்: 502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு.
குறள்: 503அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.
குறள்: 504குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.
குறள்: 505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்.
குறள்: 506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி.
குறள்: 507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்.
குறள்: 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.
குறள்: 509தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.
குறள்: 510தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.