குறள்: 512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.

Who swells the revenues, spreads plenty o'er the land,Seeks out what hinders progress, his the workman's hand

மு.வரதராசன் உரை

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

கலைஞர் உரை

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்

Explanation

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

Kural Info

குறள் எண்:512
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து வினையாடல்
இயல்:அரசியல்