மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.
குறள்: 512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.
குறள்: 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.
குறள்: 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
குறள்: 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
குறள்: 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல்.
குறள்: 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.
குறள்: 518வினைக் குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.
குறள்: 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.
குறள்: 520நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.