குறள்: 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.

'This man, this work shall thus work out,' let thoughtful king command;Then leave the matter wholly in his servant's hand

மு.வரதராசன் உரை

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

கலைஞர் உரை

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

Explanation

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty

Kural Info

குறள் எண்:517
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து வினையாடல்
இயல்:அரசியல்