குறள்: 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.

Fortune deserts the king who ill can bear,Informal friendly ways of men his tolls who share

மு.வரதராசன் உரை

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா உரை

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

கலைஞர் உரை

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்

Explanation

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties

Kural Info

குறள் எண்:519
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து வினையாடல்
இயல்:அரசியல்